ஏ.ஆர். ரஹ்மானை உருகிப் பாராட்டிய ராம்சரண்.
புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடித்துள்ள 'பெத்தி' திரைப்படம் தெலுங்கில் உருவாகி, பான் இந்தியா படமாக வெளியாகி ஜூன் 4ஆம் தேதி வெளியானது. தனது கிராமத்திற்கு அடையாளம் கிடைக்க போராடும் இளைஞனின் கதையாக, விளையாட்டை மையமாக வைத்து வெளியானது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ராம்சரண், "ஏ.ஆர். ரஹ்மான் தான் இந்தப் படத்தின் மையத்தூண்" என மனதாரப் பாராட்டினார். அதற்குப் பதில் அளித்துப் பேசிய ரஹ்மான், "சிரஞ்சீவி என்ற பெரிய ஆலமரத்தின் நிழலில் இருந்து வந்து, ராம்சரண் இன்று தனக்கெனத் தனி இடம் பிடித்து, இன்னொரு ஆலமரமாக வளர்ந்துள்ளார்" எனப் புகழ்ந்து தள்ளினார்.படத்திற்கு விமர்சனம் அப்படி, இப்படி இருந்தாலும் வசூல் நன்றாக உள்ளது. 5 நாட்களில் உலகளவில் ரூ.300.15 கோடி வசூலை கடந்துள்ளது.
0
Leave a Reply